பயணம்
தாலாட்டும் தென்றல்
செவிதனில் மெல்லிசை
நிழலாய்த் தோன்றும் காடுகள்
வெள்ளித் தட்டாய் ஒருமையில் காயும் குளிர் நிலவு
எங்கோ மனித சஞ்சாரத்தை உணர்த்தும் விளக்குகள்
தனிமையைத் தொலைக்க ஒரு புத்தகம்
மனதை மயக்கும் இரவில் ஓர் ஜன்னலோர ரயில் பயணம்
மாலை வானில் வெகுதொலைத் தேடலை முடித்து
கூட்டை நோக்கும் பறவையாய் - வீட்டை நோக்கி நான் !

No comments:
Post a Comment