Saturday, June 18, 2011

பயணம்


தாலாட்டும் தென்றல்
செவிதனில் மெல்லிசை
நிழலாய்த் தோன்றும் காடுகள்
வெள்ளித் தட்டாய் ஒருமையில் காயும் குளிர் நிலவு
எங்கோ மனித சஞ்சாரத்தை உணர்த்தும் விளக்குகள்
தனிமையைத் தொலைக்க ஒரு புத்தகம்
மனதை மயக்கும் இரவில் ஓர் ஜன்னலோர ரயில் பயணம்
மாலை வானில் வெகுதொலைத் தேடலை முடித்து
கூட்டை நோக்கும் பறவையாய் - வீட்டை நோக்கி நான் !

Sunday, June 12, 2011

ஆழி

கூட்டம் கூட்டமாய் ஏதேதோ சிந்தனைகளை சுமந்து திரியும் சக மானிடர்கள்,
மின்மினிப் பூச்சிகளாய் தூரத்தில் தோன்றி மறையும் நீர்க்கலங்கள்,
கரிய கடற்கோட்டையை விட்டு நிலத்தை அடைய முயன்று தோற்கும் வெளிறிய அலைகள் ,
பரந்த விண்ணில் சிதறிய வெள்ளியாய் மின்னும் (நகர வெளிச்சத்தில் தொலைந்த) நட்சத்திரங்கள்,
வளைந்து இருகூர்முனைகளால் மனதை வருடும் தேய்பிறை,
வாழ்வில் நிகழும் சில உன்னதமான தருணங்களுள் ஒன்று. எலியாட்ஸ் கடற்கரையில் ஓர் இரவு நேரம் !!!