Saturday, February 27, 2016

தாய்மொழி

நான் பணிபுரியும் நிறுவனம் ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டது. அவரவர் வேலையைப் பொறுத்து அங்கிருப்போருடன் உரையாடல்கள் இருக்கும். பெரும்பாலும் மின்னஞ்சல்கள்.  நிறுவனத்தினுள் ஆங்கிலத்துக்கு இணையான அங்கீகாரம் ஜெர்மானியத்திற்கும்  உண்டு. நிறுவன உள் இணைய தளங்களில் அங்கிருப்போர் பெரும்பாலும் ஜெர்மானிய மொழியிலேயே உரையாடுவர். எல்லாப் பக்கங்களும் ஜெர்மானிய மொழியிலும் இருக்கும்.இந்தியாவிலிருந்து ஜெர்மனி செல்வோருக்கு மொழிப்பயிற்சியும் உண்டு.  வேலை நிமித்தம் இங்கிருந்தே அங்கிருக்கும் கணினிகளில் நுழைந்தால் அதன் மொழி கூட ஜெர்மானியமாகவே  இருக்கும். அங்கிருப்போர் மட்டுமே பேசிக்கொண்டிருந்த மின்னஞ்சல்களில் பின் நாமும் சேர்க்கப்படும் பொது கவனித்தால்  அவர்களுக்குள் ஜெர்மானிய மொழியிலேயே இருக்கும். வெளியாட்கள் சேரும் நேரத்தில் ஆங்கிலம் வந்துவிடும். கவனிக்க, அவர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாமலில்லை, மெத்தப் படித்தோரும், பெரிய பதவிகளில் உள் ளோரும் அடக்கம். உலக அளவில் பொருளாதாரத்திலும் வாழ்க்கைத்  தரத்திலும் நல்ல நிலையில் உள்ளதாகக் கருதப்படும் ஐரோப்பிய நாட்டில் இது தான் நிதர்சனம்.

மற்ற தெற்காசிய நாடுகளான சீனா தைவான் கொரியா ஜப்பான் போப்ற இடங்களில் நிலைமை சற்று வித்தியாசமானது. அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. நேரில் ஆங்கிலம் பேசினாலே , தாளில் எழுதிக் காட்டுங்கள் அல்லது   மொழி பெயர்ப்பான் மூலம் பேசுங்கள் என்று கூறுவது சகஜம். ஆனால் யாருமே படிப்பிலோ அறிவிலோ தொளில்நுட்பத்திலோ சோடை போனவர்கள் இல்லை.

கடந்த மூன்றரை வருடங்களாக எனது ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் புழங்கு மொழியே தமிழ் தான். அமைப்புகள், பூட்டுத் திரை, முகப்பு, அழைப்பு  என நாட்காட்டி முதல் வாட்சப்  வரை அனைத்தும் தமிழே. தமிழ் எழுத்துகள் தெரிவதில் முதலிலிருந்தே  பிரச்சனை  இல்லை என்றாலும், புழங்கு மொழியாக ஹிந்தி தவிர எந்த இந்திய மொழியும் இவ்வசதியை அடையவில்லை. ஆண்ட்ராய்ட் ஒரு கட்டற்ற மென்பொருள் (Open source software ) ஆதலால் இந்த வசதியை நாமே ஏற்படுத்திக்கொள்ள முடியும். கைபேசி நிறுவனத்தை நம்பி இருக்கத்தேவை இல்லை . உலகெங்கும் உள்ள தமிழர்கள்  சிலர் இவ்வசதியை ஒரு சில தனிப்பட்ட ஆண்ட்ராய்ட் பதிவுகளில் கொண்டு வந்தனர். என்னுடைய வேலையும் ஆண்ட்ராய்ட்  சார்ந்ததாகவே இருந்ததால் சற்றே முயன்று எனது கைபேசியிலும்  பெற்றுக்கொண்டேன். பெரிய சாதனையாக இல்லாவிடிலும் மனதளவில் எனக்கு சந்தோசமான விஷயம்.

இவ்வளவையும் எழுதக் காரணம் , எனது கைபேசியைப் பார்ப்போர் நிறைய பேர் நான் ஏதோ கற்கால மனிதன் போலவே நாகரிகம் இல்லாதவனாய் இருப்பதாக கேலி பேசுவது சகஜமாகிவிட்டது. இதற்கு சில காரணங்களும் உள்ளன. தொழில் நுட்பச் சொற்கள் தமிழில் நிறையவே கண்டுபிடித்தாலும் அவைகளை உபயொகிக்காமலே  இது போன்ற இடங்களில் புதிதாகக் காணும்போது அந்நியமாகத் தெரிகிறது. உதாரணமாக என்பது மின்கலன் என்று தான் இருக்கும். இரண்டாவது ,இவ்வகையான மொழிபெயப்பு வேலையை கணனியே சில சமயம் செய்வதாலும், இதில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களில்   தொழில்நுட்பமும்  மொழிவளமும் ஒருசேரப்பெற்றவர்கள் மிகக் குறைவு. ஆதாலால் கை பேசியில் உள்ள தமிழ் பல இடங்களில் சற்று மொண்ணையாகவே இருக்கும். உதாரணமாக  என்பது மொட்டையாக "மூடு" என்று இருக்கும். இதை "தவிர்", "முடிந்தது " போன்ற சொற்களை வைத்து அந்தந்த நேரத்தில் உபயோகிக்கலாம். ஒவ்வொரு புதிய ஆன்ராய்ட் பதிவிலும் மொழிபெயர்ப்புத்  தரம் மேம்பட்டதாகவே இருக்கிறது என்பதைக்  குறிப்பிட்டாக வேண்டும்.

தொழில்நுட்பச் சொற்களை விடுங்கள், வாழ்த்துகளும் நன்றிகளும் எப்போதோ  ஆங்கிலத்துக்கு மாறிவிட்டன. அவ்வளவு ஏன் அன்றாடம் சில வருடங்களுக்கெல்லாம் முன்னர் நாம் உபயோகித்த வலது , இடது , சாயுங்காலம், சந்திப்போம் போன்றவைகளே மறைந்துவிட்டன. கடைசியாய் உங்கள் முழுப்  பெயரைத் தமிழில் எழுதியது/ வாசித்தது எப்போது ?

மூன்று மாதங்களுக்கு முன் அம்மாவிற்கு ஆன்றாய்ட் கைபேசி ஒன்று பரிசளித்தோம். எந்த புதிய கைபெசியானாலும்   இப்போது அதன் மென்பொருளைத் தமிழ் மாற்றுவது எனக்கு பரிட்சியமாகிவிட்டது. ஆங்கிலத்திலேயே பழயிருப்பார் என்றாலும், அதைத் தனக்கு நன்கு தெரிந்த தாய் மொழியிலேயே இருக்கட்டும் என்று மாற்றியாயிற்று . வாட்சப், புகைப்படங்கள் குரல் பதிவுகள், காணொளிக் காட்சி என்று அனைத்தும் பார்க்கிறார். வேறு என்ன வேண்டும் ?


  

Thursday, February 4, 2016

பெருந்தலைவர் காமராஜர் - எஸ் கே முருகன்




ஒவ்வொரு தேர்தலிலும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று கூறுவதைக் கேட்பதுண்டு. இந்த மனிதர் அப்படி என்ன சா தித்து விட்டார். அவரது பின்புலம், கொள்கைகள், ஆட்சி முறை, நேர்மை என எல்லாவற்றையும் அறிந்துகொள்ள ஒரு புத்தகம். திராவிடக் கட்சிகள் என்ன வளர்ச்சியை கொண்டு வந்தார்கள் என்று இன்னும் படிக்கவில்லை. ஆனால் சுதந்திரம் பெற்ற கையோடு அக்கால சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இவர் செய்த வேலைகள் அளப்பரியது. முற்றிலும் சோசியலிசக் கொள்கைகள் கொண்டிருந்தாலும் தமிழகத்தில் கல்வி, விவசாயம், தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களைப் புரட்டினாலும் இவர் இட்ட அடித்தளத்தை வேறு எவரேனும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம். இலவசக் கல்வி, மதிய உணவு, நீர் அணைகள் , கனரக தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் என இவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு மேல் பல துறைகளில் சிறிதளவு முன்னேற்றமே கொண்டிருக்கிறோம் என்பது என் கருது. எளிமை, நேர்மை, அதிகம் சோடை போகாத அரசியல் தந்திரங்கள் என ஒரு உதாரணமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அரசியலிலும் சமூக சேவையிலும் " வாழந்தார் , செம்மையா வாழ்ந்தார்" என்கிற மாதிரி ஒரு வாழ்க்கை. வாய்ப்பு இருந்தால் நிச்சயம் படிக்காலாம்.

விகடன் பதிப்பகம்.
302 பக்கங்கள்