Wednesday, May 11, 2016

அரசியல்

தேர்தல் சாராத ஒரு இயக்கத்தின் மூத்த அறிஞர் சமீபத்தில் சொல்லக் கேட்டது . "கல்லூரிகள், நிறைய பள்ளிகள் என முறையான கல்வி நிலையங்கள் பரவலாக்கப்பட்ட 60, 70கள்ல கல்வியறிவு கொண்ட ஒவ்வொருத்தரும் எதோ ஒரு வழியில் அரசியல் பற்றிய புரிதலோ சார்போ கொண்டிருந்தனர். ஒருவர் நிச்சயம் காங்கிரசாகவோ, பொதுவுடைமைவதியாகவோ, திராவிடக் கொள்கைகளுடனோ திரிவார். இன்றைய நிலைமையில் அரசியல் சிந்தனையே இல்லாத சுயநலம் மிகுந்த , சுற்றுப்புற நிகழ்வின் பிரக்ஞையே இல்லாத, எதற்கும் வளைந்து போகும் ஆபத்தான , படித்த, பெரும்பான்மையானவெத்துக்கூட்டம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுயமுன்னேற்றம், பொழுதுபோக்குக்கு போன்ற பல பெயர்களில் மட்டையாக்கப் பட்டுத் திரிகின்றனர். " என்றார்.
நியாயமான ஆதங்கம். தேர்தலும் பதவிகளும் அதிகாரங்களும் சார்ந்தது மட்டுமே அரசியல் அல்ல. காலைல பல்லு வெளக்குற பசைல இருந்து உணவு அரசியல், எண்ணெய் அரசியல் , கல்வி அரசியல் , வேலை அரசியல்னு ராத்திரி தூங்குற மெத்த வரைக்கும் எல்லாமே பின்னிப்பிணைஞ்ச அரசியல் தான் . கட்டமைக்கப்பட்ட நுகர்வுகளாலும் , வெத்துக் கொண்டாட்டங்களாலும் விழுங்கப்பட்ட ஒரு சமூக அமைப்பிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?