பொன்னியின் செல்வனுக்குப் பின் அதில் வரும் இடங்களோடு, மிளிர்கல்லுக்குப் பின் கண்ணகி போன பூம்புகார் முதல் குமுளி வரையான சேர்ந்துள்ளன. திருச்சி முதல் குமுளி வரை மீள் பார்வையாக இருக்கும். கண்ணகி கோயிலிருக்கும் குமுளியிலிருந்து முப்பது கி.மி தொலைவில் தான் கம்பம், அம்மாவின் ஊர். கம்பம் பள்ளத்தாக்கின் வயல்கள் ஊடே நின்று பார்த்தால் தெரியும் மலைகள் பெரியார் அணையும் புலிகள் காப்பகத்தையும் சேர்ந்தவை. பல முறை குமுளி சென்றும் சித்திராப் பௌர்ணமி அன்று மட்டும் திறக்கும் இக்கோயிலைப் பார்த்ததில்லை. விவரமில்லாத சிறு வயது ஞாபகம் : தமிழக கேரளா அரசியலில் சிக்கிய இக்கோவிலின் சீரமைப்புக்கு என் தாத்தா இறப்பதற்கு முன் பல முறை மனு எழுதியிருக்கிறார்.
சிலப்பதிகாரத்தை பள்ளிப் புத்தகங்களுக்கு வெளியே தேடியதில்லை. ரத்தினக் கற்களையும் ராசிக் கல்லாக மட்டுமே தெரியும். இன்றும் பெங்களூர் போன்ற நகர்களில் பெரிய ஹோட்டல்களில் கண்காட்சி போல் வைத்து ராசிக்கற்கள் என்ற பெயரில் கொள்ளை விற்பனை நடைபெறுகிறது. அவை என்னவென்றும் அவற்றின் பூர்விகமோ அரசியலோ துளியும் தெரியாது. ஆசிரியர் எடுத்துக்கொண்ட தலைப்பு சிலப்பதிகார மீளாய்வு மூலம் இரத்தினக்கல் அரசியல் சார்ந்தது. மேலோட்டமாக சிலப்பதிகாரம் புரிந்தால் போதுமென்றாலும் புலியூர் கேசிகனின் உரையை வாசித்துவிட்டு மிண்டும் ஒரு முறை வாசிக்க உத்தேசம்.
கரூர் நாமக்கல் காங்கேயம் பல்லடம் பகுதிகளில் தான் ரத்தினங்கள் கிடைக்கும் என்பதெல்லாம் எனக்குத் தகவல்.
சிலப்பதிகாரம் உண்மையில் நடந்ததா? மதுரை எரிந்ததா ? கண்ணகி ஏன் தெய்வம்/அடையாளம் ஆனாள்? ரத்தினங்களுக்கும் சேர நாட்டுக்கும் என்ன சம்மந்தம் ? மதங்களுக்கும் அரசமைப்புகளுக்கும் என்ன சம்மந்தம் ? பல பல கேள்விகள், தகவல்கள் ஆய்வுகள் . வரலாற்று விரும்பிகளுக்கு அறுசுவை விருந்து.புனைவு என்று ஆரம்பித்தால் ஏமாற்றமே மிஞ்சும். "மிளிர் கல்" அடர்த்தியானது .
பொன்னுலகம் பதிப்பகம்
திருப்பூர்
288 பக்கங்கள்