Friday, November 7, 2014

வந்தார்கள் வென்றார்கள் - மதன்



போன மே மாதம் முதன்முறையாக டெல்லி சென்ற பொது இரண்டு நாட்கள் தங்க வாய்ப்பு கிடைத்தது. என்னடா ஒரு பீச் கூட இல்ல, வெறும் மால்கள் , இவ்வளவு நெரிசல் என்று ஓரளவு நல்ல சிதோஷன நிலை கொண்டிருக்கும் பெங்களுரயே திட்டும் எனக்கு ஹிந்தியும் தெரியாமல் போனதால் அவ்வளவாக பிடித்தமே இல்லாமல் சம்பிரதயமாக பழைய தில்லி பக்கம் மட்டும் போய்விட்டு வந்துவிட்டேன். அநியாய வெயில் , கூட்ட நெரிசல், வேறு எங்கயாவது போகலாமா என்று நண்பனைக் கேட்டால் எல்லாமே ஏதோ முகலாய கல்லறைகள், பழைய கட்டிடங்கள், பூங்கா பெயர்களையும் கூறினான். ஒன்றும் புரியாததால் பெரிய நாட்டம் வரவில்லை. ஆக்ரா போகலாம் என்றால் நேரம் இல்லை. எப்போதோ படிக்கத்தொடங்கி விட்டுப்போன கார்டூனிஸ்ட் மதனின் மொகலாய ஆட்சி வலாற்றுப் புத்தகம் "வந்தார்கள் வென்றார்கள் " இந்த வாரம் முடிந்தது. யமுனை நதியின் கரையில் தேமேவென்று இருக்கும் இந்த ஊருக்கு உலக வரலாற்றில் எவ்வளவு மவுசு என்று இப்போது தான் புரிகிறது. பல நூற்றாண்டுகளாக எவ்வளவு சாம்ராஜ்யங்கள், படையெடுப்புகள், சூறையாடல்கள், குருதி ஆறுகள் என்று அனைத்தையும் கண்டு பீனிக்ஸ் பறவையாக நிலைத்திருக்கிறது ஆச்சிரியம் தான். ஆக்ராவில் ஏதோ தாஜ் மஹால் மட்டும் இருக்கிறதென்று தெரியும். அதன் வரலாரும் உணர்சிப்பூர்வமாகத்தான் இருக்கிறது. மத நல்லினக்கங்களில் அக்பரைப் புகழ்வது தெரியும். ஏழ்மைக் குடும்பத்தில் சிவாஜி ரஜினி போல் தெருவுக்கு வந்து பின் முயன்று ஈரான் முதல் வங்கம் வரை ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கட்டி ஆண்ட பாபரின் கதை மனதில் அப்படியே தங்கிவிட்டது. பள்ளி வரலாறுகளில் கொடூரனாகச் சித்தரிக்கப்படும் அவுரங்கசிப்பின் மறுபக்கம் எனப் பல தகவல்கள். கொடூரமான கொலைகள் , சகோதரச் சண்டைகள் , போர்க்களங்கள் என்று ஒருவாறாகப் போனாலும் சூரையாடல்களில் தொடங்கி பின் நல்லிணக்கம் கொண்டு மெல்ல சாம்ராஜ்ஜியத்தை வளர்த்து கலைகள் , ஓவியம், கட்டிடக் கலை என்று எல்லாவற்றையும் கண்டு வாழ்ந்துவிட்டுப்போயிருக்கிறார்கள். பிரிட்டிஷர்கள் தாஜ் மகாலை இடிக்க முயன்றது, பின் அதன் கதவுகள், உட்புறங்களில் இருந்த விலையுயர்ந்த ரத்தினங்கள் முத்துக்களை சொரண்டிக்கொண்டு போனது , தெற்கே செஞ்சிக் கோட்டை தஞ்சாவூர் கூட ஒரு காலத்தில் மோகலாயர்களின் கிழ் இருந்தது என்பது எனக்குச் செய்தி தான். குத்துப் மினார் முதல் தாஜ்மஹால் செங்கோட்டை, ஏன் தெற்கே ஔரங்காபாத் ஹைதராபாத்திலும் கலை வளர்த்திருக்கிறார்கள். புனைவு தான் என்றாலும் பொன்னியின் செல்வன் படித்ததும் அதில் வரும் சோழ வள நாட்டு இடங்களையும் கோட்டைகளையும் பார்க்க மனம் கண்டபடி தேடியது. இன்னும் போன பாடில்லை. (கல்கி குறிப்பிடும் பெரும்பாலான இடங்கள் இப்போது இல்லை எனத் தேடிப்போனவர்கள் எழுதியிருக்கிறார்கள் ). மீண்டுமொருமுறை அர்த்ததுடன் சந்திப்போம் டெல்லி!